search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு மாம்பலம்"

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரமணி (47). டெய்லர். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள பழு தடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீரமணி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மேற்கு மாம்பலம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
    சென்னை:

    மேற்கு மாம்பலம், எம்.எச்.ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் குமார். இவரது மனைவி பரிமளா. இவர்களது 1½ வயது மகன் பரத். இவர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மகன் பரத்துக்கு பால்கனியில் நின்றபடி தாய் பரிமளா ‘பிஸ்கட்’ கொடுத்தார். பின்னர் அறையில் இருந்த பாலை எடுப்பதற்காக பரிமளா மட்டும் வீட்டுக்குள் சென்றார்.

    அப்போது பால்கனியில் நின்ற சிறுவன் பரத், தடுப்பு கம்பிகளுக்கு இடைவெளி வழியாக 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுவன் பரத்தின் நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அதில் அவனுக்கு தையல் போடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
    மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் பைனான்சியர். இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் நிதி நிறுவன அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் சரவணகுமார் என்பவர் மோகனுக்கு அறிமுகமானார்.

    இதைதொடர்ந்து கடந்த 23-ந்தேதி மோகனையும் அவரது உறவினரையும் மகாபலிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்திற்கு பைனான்ஸ் கொடுப்பது தொடர்பாக சரவணகுமார் காரில் அழைத்து சென்றார். திடீரென அவர் சேலையூரை அடுத்த மப்பேடு பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்.

    அங்கு மறைந்து இருந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகனையும், அவரது உறவினரையும் கட்டிப் போட்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.

    இதனை அறிந்த மோகனின் சகோதரர் ரூ.33 லட்சம் கொடுத்து மோகனையும், உறவினரையும் மீட்டார். அப்போது 28 பவுன் நகையையும் கடத்தல் கும்பல் பறித்துக் கொண்டனர். இதுபற்றி வடபழனி போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடத்தல் தொடர்பாக எம்.எம்.டி.ஏ. காலனி பாடசாலை தெருவை சேர்ந்த ஷேக், சூளைமேடு நந்த குமார், மதுரவாயல் சீனிவாசன், சுதிர்குமார், செல்லபாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ. 3 ½ லட்சம், கார், 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் சரவண குமார் என்ற பெயரில் போலியாக வாலிபர் மோகனிடம் அறிமுகமாகி இருப்பது தெரிந்தது. அவரையும் கூட்டாளிகளான மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×