search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Mambalam"

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரமணி (47). டெய்லர். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள பழு தடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீரமணி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு மாம்பலத்தில் பிரபல நகைக்கடை மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல தங்க நகை கடையில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர்.

    பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மன வேதனையில் இருந்தார். இதுபற்றி மனைவி கேட்டபோது கடையில் பிரச்சினை என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் அறைக்குள் சென்ற ரவிக்குமார் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கூச்சலிட்டார். தகவல் அறிந்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களாக கடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவிக்குமார் மனைவியிடம் கூறி புலம்பி வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரவிக்குமாரின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? அவருக்கும் கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையே மோதல் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
    சென்னை மேற்கு மாம்பலம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
    சென்னை:

    மேற்கு மாம்பலம், எம்.எச்.ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் குமார். இவரது மனைவி பரிமளா. இவர்களது 1½ வயது மகன் பரத். இவர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மகன் பரத்துக்கு பால்கனியில் நின்றபடி தாய் பரிமளா ‘பிஸ்கட்’ கொடுத்தார். பின்னர் அறையில் இருந்த பாலை எடுப்பதற்காக பரிமளா மட்டும் வீட்டுக்குள் சென்றார்.

    அப்போது பால்கனியில் நின்ற சிறுவன் பரத், தடுப்பு கம்பிகளுக்கு இடைவெளி வழியாக 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுவன் பரத்தின் நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டு இருந்தது. அதில் அவனுக்கு தையல் போடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இதனால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.

    இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.

    தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


    தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.

    தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.


    தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.

    ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
    மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் பைனான்சியர். இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் நிதி நிறுவன அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் சரவணகுமார் என்பவர் மோகனுக்கு அறிமுகமானார்.

    இதைதொடர்ந்து கடந்த 23-ந்தேதி மோகனையும் அவரது உறவினரையும் மகாபலிபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்திற்கு பைனான்ஸ் கொடுப்பது தொடர்பாக சரவணகுமார் காரில் அழைத்து சென்றார். திடீரென அவர் சேலையூரை அடுத்த மப்பேடு பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்.

    அங்கு மறைந்து இருந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகனையும், அவரது உறவினரையும் கட்டிப் போட்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.

    இதனை அறிந்த மோகனின் சகோதரர் ரூ.33 லட்சம் கொடுத்து மோகனையும், உறவினரையும் மீட்டார். அப்போது 28 பவுன் நகையையும் கடத்தல் கும்பல் பறித்துக் கொண்டனர். இதுபற்றி வடபழனி போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடத்தல் தொடர்பாக எம்.எம்.டி.ஏ. காலனி பாடசாலை தெருவை சேர்ந்த ஷேக், சூளைமேடு நந்த குமார், மதுரவாயல் சீனிவாசன், சுதிர்குமார், செல்லபாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ. 3 ½ லட்சம், கார், 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் சரவண குமார் என்ற பெயரில் போலியாக வாலிபர் மோகனிடம் அறிமுகமாகி இருப்பது தெரிந்தது. அவரையும் கூட்டாளிகளான மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×