search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாளர்"

    சேலம் அஸ்தம்பட்டி, சின்னபுதூரில் ஓட்டல் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி சின்ன புதூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள  ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்?  என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    ×