search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலி
    X

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலி

    மேற்கு மாம்பலம் அருகே மின்சாரம் தாக்கி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வீரமணி (47). டெய்லர். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள பழு தடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி வீரமணி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×