செய்திகள்
கைது

அதிராம்பட்டினத்தில் 200 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2019-10-03 14:52 GMT   |   Update On 2019-10-03 14:52 GMT
அதிராம்பட்டினத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரெயில்வே நிலையம் பின்புறம் உப்பளம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டு வருவதாக அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் ஆய்வு செய்தபோது 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. 

இந்த நிலையில் அப்பகுதியில் மது விற்பனை செய்த சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் மதுப்பானக்கடைகள் விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் விற்பதற்கு அந்த பாட்டில்கள் வைப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News