செய்திகள்
விபத்து

கீழ்பென்னாத்தூர் அருகே பஸ் மோதி கணவன், மனைவி பலி

Published On 2019-09-29 16:48 GMT   |   Update On 2019-09-29 16:48 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அடுத்த தைலாங்குளம் பகுதியை சார்ந்தவர் ரவி (36) விவசாயி, அவரது மனைவி உமா (30). ரவி  நேற்று காலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். 

மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய வேலைகளை பார்த்து விட்டு மாலை 4 மணி அளவில் தைலாங்குளத்திற்கு பைக்கில் வீடு திரும்பினார்கள். திருவண்ணாமலை சென்னை தேசிய நெடுஞ்சாலை மேல்பாப்பாம்பாடி ஏரிக்கரை சாலைவளைவில் வந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் உமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். 

தகவலறிந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் விரைந்து வந்து இறந்து போன ரவி மற்றும் உமா உடல்களை கைப்பற்றி,செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இறந்து போன தம்பதியினருக்கு 6 வயதில் முகேஷ் என்ற மகன், 3 வயதில் சாதனா என்ற மகள் உள்ளனர். கணவன் மனைவி பலியான சம்பவத்தால் கீழ்பென்னாத்தூர் மற்றும் தைலாங்குளம் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News