search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி பலி"

    • 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் பாலூர் கொல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் ஆரணியில் கோணிப்பை தைக்கும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ராஜேஸ்வரி (35). நேற்று காலை கணவன் மனைவி இருவரும் பைக்கில் ஆரணிக்கு வேலைக்கு சென்றனர்.

    மாலை வேலை முடிந்து மீண்டும் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென் மாதிமங்கலம் என்ற இடத்தில் வந்த போது கரூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார் எதிர்ப்பாராக விதமாக பைக்கின் மீது மோதியது.

    இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் மீது மோதிய வேகத்தில் அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.
    • போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது78) வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (76). இவர் தடய அறிவியல் துறை ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இதில் கணவன்-மனைவி இருவரும் கீழ் தளத்தில் வசித்து வந்தனர். மற்ற வீடுகள் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமானவை. அவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் இங்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.

    மூர்த்தி-பானுமதி தம்பதிக்கு குழந்தை இல்லை. எனவே இருவரும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். தினமும் இரவில் இந்த தம்பதியே வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டுவது வழக்கம்.

    நேற்று இரவு 10.30 மணியளவில் மூர்த்தியும், பானுமதியும் வீட்டில் வெளி கேட்டை பூட்டுவதற்காக சென்றனர். அப்போது மின்சார கேட்டில் உள்ள விளக்குகளுக்கு செல்லும் வயரில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கேட் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    அதை அறியாத பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதனால் பதறி துடித்த மூர்த்தி, மனைவியை காப்பாற்றுவதற்காக அவரை பிடித்து இழுத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் அலறி துடித்தபடி கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பக்கத்து வீட்டு காவலாளி ஓடி வந்து பார்த்தார். அவர் சுதாரித்துக்கொண்டு விலகி நின்றபடி கூச்சல் போட்டு அனைவரையும் அழைத்தார். அப்போது எதிர்ட்டில் வசித்தவர் கீழே இறங்கி ஓடி வந்தார்.

    அவர் முன்எச்சரிக்கையாக இரும்பு கேட்டை லேசாக தொட்டார். அப்போது ஷாக் அடித்ததால் உடனே கையை எடுத்துக்கொண்டார்.

    இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் பார்த்தபோது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த குடியிருப்பில் நீண்ட நாட்களாகவே மின்சார பிரச்சினை இருந்து வருகிறது. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய சொல்லி பலமுறை புகார் அளித்தோம்.

    ஆனால் அவர்கள் வந்து சரிசெய்யவில்லை. பல நேரங்களில் மின் வாரியத்துக்கு போன் செய்தால் போனையும் எடுப்பதில்லை' என்று குற்றம்சாட்டினர்.

    குடியிருப்பில் அடுக்குமாடி மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் சகர்பானு ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன்-மனைவி 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் லுக்மான் ஹக்கீம் (வயது 44). இவரது மனைவி சகர்பானு (33).

    லுக்மான் ஹக்கீம் பழைய பேப்பர்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதன் காரணமாக அவர் குடும்பத்துடன் நெல்லை மேலப்பாளையத்தில் வந்து தங்கி உள்ளார்.

    இவர்கள் 2 பேரும் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த அவரது உறவினராக முகம்மது உள்பட 2 பேர் உடன் சென்றனர். டவுன் கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் 4 பேரும் குளித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சகர்பானு ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தண்ணீரில் மூழ்கிய அவர் உயிருக்கு போராடியபடி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவரது கணவர் லுக்மான் ஹக்கீம் மனைவியை காப்பாற்றுவதற்காக அந்த பகுதிக்கு நீந்திச்சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன்-மனைவி 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சந்திப்பு போலீசாரும் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்திலேயே லுக்மான் ஹக்கீம் சடலமாக மீட்கப்பட்டார். சகர்பானு உடலை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சகர்பானு உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×