என் மலர்
நீங்கள் தேடியது "Husband and wife sacrifice"
- 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் பாலூர் கொல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் ஆரணியில் கோணிப்பை தைக்கும் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி (35). நேற்று காலை கணவன் மனைவி இருவரும் பைக்கில் ஆரணிக்கு வேலைக்கு சென்றனர்.
மாலை வேலை முடிந்து மீண்டும் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென் மாதிமங்கலம் என்ற இடத்தில் வந்த போது கரூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார் எதிர்ப்பாராக விதமாக பைக்கின் மீது மோதியது.
இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் மீது மோதிய வேகத்தில் அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.
- அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (60). இவரது மனைவி விமலா ராணி. இவர்கள் உறவினர் திருமணத்திற்காக ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி தனியார் திருமண மண்டபத்திற்கு எெலக்ட்ரிக் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் கொத்தம்பாடி பகுதியில் மண்டபத்தின் எதிரே வாகனத்தை திருப்பினர். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ், அவர்கள் வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் பஸ்சின் அடியில் சிக்கி தலை சிதறி பரிதாபமாக சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்த பகுதி கிராம மக்கள் இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு பல்வேறு முறை கோரிக்கைகள் வைத்தும், சாலை மறியல் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து ஆத்தூர் ஆர்.டி.ஓ. ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெடுஞ்சா லைத்துறை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி மேம்பாலம் அமைக்கவும், தடுப்புகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட் டனர். சுமார் 2 மணி நேரத் திற்கு பின்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.






