செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறிப்பு

Published On 2019-09-23 09:09 GMT   |   Update On 2019-09-23 09:09 GMT
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ரமணி ராயப்பன் (வயது 58). இவர், கென்னட் சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது தாவூத்ராஜா (24) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாவூத் ராஜாவை கைது செய்தனர்.

மதுரையை சேர்ந்த ஜெயராம் (53) டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அகிம்சாபுரம் பகுதியில் சென்றபோது பாலசுப்பிரமணி என்ற கொப்பறை, ஜவகர்லால் மகன் மாலிக் பாட்சா (21), பள்ளிவாசல் தெரு, ராஜ்குமார் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மாலிக் பாட்சாவை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News