செய்திகள்
திருவள்ளூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு டாஸ்மார்க் இயங்கி வருகிறது. இதன் அருகில் அனுமதி பெறாமல் மதுபானம் கூடம் இயங்கி வந்தது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மார்க் மண்டல மேலாளர் கடையைப் பூட்டி சீல்வைத்து விட்டு சென்றார்.
ஆனாலும் அதன்பிறகும் மீண்டும் அப்பகுதியில் மீண்டும் மது விற்பனை நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் தனிப்படையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மது மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த தேவகோட்டையை சேர்ந்த பிரபு, ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்