செய்திகள்
மரணம்

கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் இருந்து விழுந்து விவசாயி பலி

Published On 2019-09-17 06:27 GMT   |   Update On 2019-09-17 06:27 GMT
கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் இருந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி நைனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் (65). விவசாயி. இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் அருகே என்ன தென்னை மரத்தில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News