செய்திகள்
தாக்குதல்

பெரியகுளம் அருகே காதல் பிரச்சினையில் வாலிபரை தாக்கிய கும்பல்

Published On 2019-09-16 17:17 GMT   |   Update On 2019-09-16 17:17 GMT
பெரியகுளம் அருகே காதல் பிரச்சினையில் வாலிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள வடகரை வைத்திய நாதபுரத்தை சேர்ந்த கரிகாலன் மகன் சசிகுமார் (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகள் அனுப்பிரியாவை காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் அனுப்பிரியாவுக்கு பிரகாஷ் என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் அனுப்பிரியாவின் அண்ணன் சதீஸ், அவரது நண்பர்கள் பிரபாகரன், பிரகாஷ், பெரியசாமி ஆகியோர் சம்பவத்தன்று சசிகுமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த சசிகுமார் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் 4 பேரை தேடி வருகின்றனர்.

இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காந்திஜி தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி பஞ்சம்மாள் (38). இவரது அக்கா மகன் கார்த்திக் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் பானுமதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் முருகனுக்கும் பஞ்சம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து பஞ்சம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News