செய்திகள்
முக ஸ்டாலின்.

பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது- மு.க ஸ்டாலின்

Published On 2019-09-15 14:47 GMT   |   Update On 2019-09-15 14:47 GMT
பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

“  கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும். 

திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக்கூடாது. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. எந்த விழாவிலும் பேனர் வைக்கக் கூடாது. திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு 2020- ஜூன் 3 ஆம் தேதி கலை இலக்கிய விருதுகள் வழங்கப்படும்”

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News