செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அருகே பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-13 16:10 GMT   |   Update On 2019-09-13 16:10 GMT
தர்மபுரி அருகே 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எதற்காக தீக்குளித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு(வயது58). இவருடைய மகன் மேகவர்ணன் (14). விவசாயியான ராஜுவுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை மேகவர்ணன் என்பதால் செல்லமாக வளர்த்து வந்தார். மேகவர்ணன் கடத்தூரில் உள்ள தனியார் பள்ளியில்  8-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள பம்ப் செட் கிணற்றுக்குள் மேகவர்ணன் திடீரென்று இறங்கினார். பின்னர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மேகவர்ணன் தீயில் உடல் கருகி உயிர் இழந்து பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து வந்து மேகவர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மேகவர்ணன் என்ன காரணத்திற்காக? உடலில் தீ வைத்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News