செய்திகள்
திருமண நிறுத்தம்

மேலூர் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் ஓட்டம்

Published On 2019-09-11 09:55 GMT   |   Update On 2019-09-11 09:55 GMT
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் கருப்புசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரின் ஒப்புதலின்படி இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரு வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மணமகள் வீட்டில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மணமகன் கருப்புசாமி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக மணமகள் சார்பில் மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கருப்புசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் மாயமானதால் மணமகள் வீடு களை இழந்தது.

Tags:    

Similar News