செய்திகள்
நகை கொள்ளை

விவசாயி வீட்டுக்குள் புகுந்து 42 பவுன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை

Published On 2019-09-10 10:14 GMT   |   Update On 2019-09-10 10:14 GMT
அருப்புக்கோட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து 42 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 65). விவசாயியான இவருக்கு அதே தெருவில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளன.

நேற்று இரவு ஒரு வீட்டை பூட்டிவிட்டு பெத்துராஜ், அவரது மனைவி மீனாட்சி மற்றொரு வீட்டில் தூங்கச் சென்று விட்டனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல் அங்கிருந்த மரப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 42 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பியது. இன்று காலை வீட்டிக்கு வந்த பெத்துராஜ் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போயிருந்தன.

இதுகுறித்து பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 42 பவுன் நகையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News