விருதுநகர் அருகே விபத்து - வாலிபர் பலி
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி(வயது 32). இவர் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு இவர் ராமத்தூரில் இருந்து ஒருவரை அழைத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். விருதுநகர்-சிவகாசி சாலையில் வந்து கொண்டிருந்தார். குமாராலிங்கபுரம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சிவகாசியை நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவிசப்பட்ட ராஜீவ் காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த பாலுவை கைது செய்தனர்.