செய்திகள்
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பு - 2 பேர் கைது
சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி:
சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை வருவாய் அலுவலர் மற்றும் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.
ஆனால் சிலர் அனுமதியின்றி முறைகேடாக வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கின்றனர். இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.
எனவே முறைகேடாக செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி கண்மாய் கரை பகுதியில் திருட்டுத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கூரைக் கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி மீனம்பட்டி காட்டுராஜா (வயது 42), செல்வம் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சரவெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை வருவாய் அலுவலர் மற்றும் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.
ஆனால் சிலர் அனுமதியின்றி முறைகேடாக வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கின்றனர். இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.
எனவே முறைகேடாக செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி கண்மாய் கரை பகுதியில் திருட்டுத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கூரைக் கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி மீனம்பட்டி காட்டுராஜா (வயது 42), செல்வம் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சரவெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.