செய்திகள்
கும்பகோணம் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தாய் புகார்
கும்பகோணம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே திருமங்கலகுடி ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது காபுஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கபாத் நிஷா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 1/2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் முகம்மது காபுஸ் வெளிநாட்டில் இருந்து விடுமுறை எடுத்து ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கபாத் நிஷா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் விரைந்து கபாத் நிஷா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே கபாத் நிஷாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் ஆயிஷா மரியம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.