செய்திகள்
விபத்து

திண்டுக்கல் அருகே கார் மோதி மில் தொழிலாளி பலி

Published On 2019-09-03 10:02 GMT   |   Update On 2019-09-03 10:02 GMT
திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதியதில் மில் தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள மறவபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது42). தனியார் மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40) பெயிண்ட்டராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாடிக்கொம்புவில் இருந்து திண்டுக்கல் நோக்கி பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சிவக்குமார் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News