செய்திகள்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது
தூத்துக்குடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 பெண்களை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்குத தகவல் கிடைத்தது. இவை மதுரையில் இருந்து பேருந்து மூலம் கடத்தி வரப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தாளமுத்து நகர் கே.வி.கே. சாமி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மணி மனைவி பஞ்சவர்ணம் (வயது 69), அதே பகுதியை சேர்ந்த சேகர் மனைவி கருப்பாயி(65 ) என்பதும், இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.