செய்திகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மாலையில் பெய்த இடியுடன் பெய்த கனமழை குளிர்வித்தது.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னையில் தரமணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் இடியுடன் பெய்த கனமழை சென்னையை குளிர்வித்தது. இதேபோல், நேற்று முன்தினமும் சென்னையில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது