செய்திகள்
தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

Published On 2019-08-28 09:26 GMT   |   Update On 2019-08-28 09:26 GMT
திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் ஆனது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள முதலிப்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த குப்பை கிடங்கில் திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. 10 ஏக்கர் பரப்பளவிற்கும் தீ பரவி கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சு திணறலால் அவதி அடைந்தனர்.தீ விபத்து குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகையால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவைழக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News