செய்திகள்
திருச்செந்தூரில் கூலித்தொழிலாளி மர்ம மரணம்
திருச்செந்தூர் பேருந்து நிலையம் பிள்ளையார் கோவில் அருகில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பேருந்து நிலையம் பிள்ளையார் கோவில் அருகில் நேற்று ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக வந்தவர்கள் திருச்செந்தூர் போலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் பிரேதத்தை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தியதில் இவர் திருச்செந்தூர் அருகே உள்ள வள்ளிவிளை பண்டாரவிளையைச் சேர்ந்த மகராஜா கூலித்தொழிலாளி என்பதும் இவர் கடந்த 23ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் மனைவி சந்திரா புகாரின் பேரில் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகராஜனுக்கு குடி பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக மது குடித்ததினால் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உண்டா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.