செய்திகள்
தீக்குளிப்பு

மத்தூர் அருகே வீட்டின் முன் பெண் தீக்குளிப்பு- போலீசார் விசாரணை

Published On 2019-08-27 13:20 GMT   |   Update On 2019-08-27 13:20 GMT
மத்தூர் அருகே இன்று அதிகாலை வீட்டின் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தொகரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மேளம் வாசிப்பவர். இவரது மனைவி துர்க்கா (வயது32). இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் துர்க்காவுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7 மாதங்களாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இதற்கு பணம் அதிகம் செலவு செய்தும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட துர்க்கா இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்து தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வரும் வழியிலேயே துர்க்கா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் துர்க்கா இறந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார். வீட்டின் முன்பு பெண் தீக்குளித்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News