search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தீக்குளிப்பு"

    • நேற்று இரவு ஷாலினிக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட்டது.
    • ஷாலினி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையை சேர்ந்தவர் ஷாலினி (வயது 35). இவருடைய கணவர் லோகநாதன். பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (12), கோகுல கிருஷ்ணன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லோகநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஷாலினி சந்தேகம் அடைந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று இரவு ஷாலினிக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஷாலினி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் லோகநாதன் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தார். பின்னர் ஷாலினி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோடு சப்தகிரி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். டிரைவர். இவரது மனைவி அமுதமொழி (வயது 32).

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே ஆறுமுகத்துக்கும், அவரது மனைவி அமுதமொழிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அமுதமொழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் முழுவதும் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதமொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×