செய்திகள்
சுசீந்திரம் அருகே சாஸ்தா கோவில் பூட்டை உடைத்து கலசம் கொள்ளை
சுசீந்திரம் அருகே சாஸ்தா கோவில் பூட்டை உடைத்து கும்ப கலசத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரத்தை அடுத்த காக்காமூர் பகுதியில் சாஸ்தான் கோவில் உள்ளது. கோவிலில் பூஜைகள் முடிந்த பின் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் பூஜைகள் மேற்கொள்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு வந்தனர். மேலும் சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜெகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டபோது கொள்ளையர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பிள்ளையார் சன்னதியில் இருந்த கும்ப கலசத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கலசம் திருடப்பட்ட இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.