செய்திகள்
மரணம்

டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பலி

Published On 2019-08-26 07:46 GMT   |   Update On 2019-08-26 07:46 GMT
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிவலம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாறாடி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38).இவர் வெங்கடாசலபுரம் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு உப்பிலியபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதையடுத்து,அதனை சரி செய்யும் பணியில் குமார் ஈடுபட்டார். அப்போது உயர்மின் அழுத்தம் காரணமாக அவரை மின்சாரம் தாக்கியது.இதில் தூக்கி வீசப்பட்ட குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News