செய்திகள்
கைது

கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2019-08-25 11:46 GMT   |   Update On 2019-08-25 11:46 GMT
கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள தென்னங்குடியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் தென்னங்குடியில் கண்காணிப்பு பணி மேற் கொண்டனர். அப்போது தென்னங்குடி வடக்குத்தெரு பாலகுரு என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 40), அதே பகுதியை சேர்ந்த சேகர்(45) ஆகிய இருவரும் அவர்களுடைய வீட்டில அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News