மதுரையில் வீடுகளின் கதவை உடைத்து தங்க நகை- வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
மதுரை:
மதுரை கே.புதூர் கற்பகம் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 41). இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் யாரோ வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். ஊர் திரும்பிய சங்கரநாராயணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் வைகை காலனியை சேர்ந்தவர் ராஜாமணி (64) கட்டிட தொழிலாளி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் யாரோ கதவை உடைத்து உள்ளே புகுந்துள்னனர்.
அவர்கள் வீட்டினுள் இருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் கைக்கடிகாரம் போன்றவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து அண்ணா நகர் போலீசில் ராஜாமணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.