செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டி அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2019-08-22 09:35 GMT   |   Update On 2019-08-22 09:35 GMT
கும்மிடிப்பூண்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்து. இவர் சிறுமிகளை வைத்து வீட்டில் விபசாரம் செய்து வந்ததாக கடந்த 13-ந்தேதி கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்துவுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆத்துப்பாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News