செய்திகள்
திண்டுக்கல்லில் மோடி உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் மோடி உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகர காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ தண்டபாணி, காங்கிரஸ் நிர்வாகிகள் அப்துல்ஜப்பார். ராஜாஜி, பொட்டு செல்வம், ரவிசுப்பிரமணி, முன்னாள்நகர தலைவர் ஆறுமுகம், மரியசெல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாநகர காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகர காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ தண்டபாணி, காங்கிரஸ் நிர்வாகிகள் அப்துல்ஜப்பார். ராஜாஜி, பொட்டு செல்வம், ரவிசுப்பிரமணி, முன்னாள்நகர தலைவர் ஆறுமுகம், மரியசெல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.