செய்திகள்
தொல்.திருமாவளவன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 30-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Published On 2019-08-22 05:03 GMT   |   Update On 2019-08-22 05:03 GMT
காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிற 30-ந்தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருப்பது வேடிக்கையான ஒன்று.

அணுசக்திக்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடங்குளத்தில் மூன்றாவது அணு உலை அமைப்பதற்கு எதிராக போராடும். காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகிற 30-ந் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News