செய்திகள்
பெண் மாயம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

Published On 2019-08-20 09:39 GMT   |   Update On 2019-08-20 09:39 GMT
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானதையடுத்து, அப்பெண்ணை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாகர்கோவில்:

கோட்டார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து திருமணம் பேசி முடிக்கப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

மாயமான பெண்ணை பெற்றோர் உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் மாயமான பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகள் மாயமானது குறித்து பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடினார்கள். அவரது செல்போன் எண் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது அந்த இளம்பெண் சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாலிபர் ஒருவருடன் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்கள். தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், வீட்டில் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றதாகவும், அந்த பெண் கூறினார். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை யாரும் தேட வேண்டாம் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். போலீசார் அந்த பெண்ணை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News