செய்திகள்
திருத்தங்கலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருத்தங்கலில் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த வர் கண்ணன் (வயது 38). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை நீடித்தது. இதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
நேற்று இரவும் கண்ணனுக்கும், செல்விக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் தூங்கி விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு கண்ணன் தற்கொலை செய்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.