செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கொற்றிக்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-08-19 08:25 GMT   |   Update On 2019-08-19 08:25 GMT
கொற்றிக்கோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கொற்றிக்கோடை அடுத்த செம்பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெபின்ஜோயல் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

அவரது வீட்டில் பெற்றோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர்களும் திருப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றனர். சம்பவத்தன்று சிகிச்சை முடிந்து பெற்றோர் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் விலை உயர்ந்த கேமிராவையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜெபின் ஜோயல் கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிறிஸ்து ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற் கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News