செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

நன்னிலம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2019-08-18 16:33 GMT   |   Update On 2019-08-18 16:33 GMT
நன்னிலம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள அதம்பார்மன் மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது60). இவர் தினமும் கடகம்பாடி அரசு மது பானக்கடை அருகே காலி பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மதுக்கடை அருகே வயலில் கிடந்த மதுபாட்டிலை எடுத்துள்ளார். அப்போது வயலில் இருந்த கம்பி வேலியில் கை வைத்துள்ளார். இதில் அருகேயுள்ள மின் கம்பம் வழியாக கம்பி வேலியில் பாய்ந்த மின்சாரம் அவரை தாக்கியதில் சம்பவ இடத்தில் ராஜமாணிக்கம் இறந்தார்.

இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News