செய்திகள்
சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Published On 2019-08-14 12:29 GMT   |   Update On 2019-08-14 12:29 GMT
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவருளிமங்கலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார்(25) என்ற இளைஞர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குபதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தார். 

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவக்குமாருக்கு 7 வருட சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

இதையடுத்து போலீசார் சிவக்குமாரை சேலம் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார். 
Tags:    

Similar News