திண்டுக்கல் அருகே தனியார் மண்டபத்தில் சூதாடிய 13 பேர் கைது
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள சில தனியார் மண்டபங்களில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி. சக்திவேலுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. வினோத் தலைமையில் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.பி. தனிப் பிரிவு மாரிமுத்து ஆகியோர் கொண்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பழனி பைபாஸ் பகுதியில் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சூதாட்டம் நடப்பது தெரியவரவே அங்கு சுற்றி வளைத்தனர்.
பணம் வைத்து சூதாடிய என்.எஸ்.நகரைச் சேர்ந்த மூர்த்தி, பழனியைச் சேர்ந்த பாலகுரு, பூச்சி நாயக்கன்பட்டி சின்னையா, மொட்டனம் பட்டி ஆதி சிவன், மேற்கு கோவிந்தாபுரம் மருதநாயகம், முருகபவனத்தைச் சேர்ந்த மோகன், அனுமந்தராயன் கோட்டை முனியசாமி, செல்வி நகரைச் சேர்ந்த ஜெயக்கொடி, மெங்கில்ஸ்ரோடு மைக்கேல், வேடசந்தூரைச் சேர்ந்த உதுமான் அலி, சாகுல் அமீது, அச்சராஜக்காபட்டியைச் சேர்ந்த செல்வம் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.