செய்திகள்
சென்னை பஸ்சில் பயணி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
நாகர்கோவிலில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சின் கடைசி இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜாசிங் விசாரணை நடத்தினார். மேலும் இறந்தவரின்பேண்ட் பாக்கெட்டில் விஷ மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு பஸ்சில் ஏறிய அந்த பயணி யார்? அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.