search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி மரணம்"

    • விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது. விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

    விமான நிலைய மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை விமானத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ×