செய்திகள்
வீடு தீப்பிடித்து எரியும் காட்சி.

பெரும்பாலை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்

Published On 2019-08-03 11:19 GMT   |   Update On 2019-08-03 11:19 GMT
பெரும்பாலை அருகே நள்ளிரவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாமத்தாள் கிராமத்தை சேர்நதவர் சுப்புறு (வயது 70). விவசாயியான இவர்களது கூரை வீடு திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் சமீபத்தில் ஆடு விற்ற பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணமும், 10 பவுன் தங்க நகைகளும் துணி மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. 

இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News