செய்திகள்
மரணம்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் மர்ம மரணம்

Published On 2019-07-30 10:01 GMT   |   Update On 2019-07-30 10:01 GMT
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பயணிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் பையில் வைத்திருந்த சில ஆவணங்களை வைத்து விசாரித்தனர்.

அதில் அவரது பெயர் மாரியம்மாள் (வயது 65) என தெரிய வந்தது. இவரது மகன் மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகனை பார்த்து விட்டு திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தபோது இறந்து கிடந்தார். இவருக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதும் இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடலை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News