செய்திகள்
திருச்சுழி அருகே மின்கம்பம் விழுந்து முதியவர் பலி
திருச்சுழி அருகே மின் கம்பம் மேலே விழுந்ததில் காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள டி.வேலம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 83). இவரது மனைவி வேலம்மாள்.
மகன்-மகளுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. நேற்று இரவு வீட்டின் முன்பு சுந்தர்ராஜ் நாற்காலி போட்டு அமர்ந் திருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக அங்கிருந்த மின் கம்பம் சாய்ந்தது. அந்த கம்பம் சுந்தர்ராஜ் மீது விழுந்ததில் அவர் காயம் அடைந்தார்.
அவரை உறவினர்கள் பரமக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிவகங்கை, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட சுந்தர்ராஜ் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.
இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.