செய்திகள்
செயின் பறிப்பு

நாகமலை புதுக்கோட்டை அருகே பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-07-27 14:28 GMT   |   Update On 2019-07-27 14:28 GMT
பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த ராமக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி வர்ஷிதா (வயது 37) பட்டதாரி. இவர் நேற்று மதியம் நேர்முக தேர்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்றார்.

தேனி-மதுரை மெயின் ரோட்டில் ஒரு மர்ம பைக் பின் தொடர்ந்து வந்தது. அதில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் இருந்தனர்.

அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த மர்ம நபர் வர்ஷிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக வர்ஷிதா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News