செய்திகள்
கைது

வில்லியனூரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2019-07-22 09:42 GMT   |   Update On 2019-07-22 09:42 GMT
வில்லியனூரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்குள்ள கூட்டுறவு பால் சொசைட்டி அருகே 2 பேர் நின்று கொண்டு செல்போனில் பேசியபடியே லாட்டரி சீட்டு முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து கொண்டிருந்ததை கண்டனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் தடைசெய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 நம்பர் சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.320 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்த வேலு(வயது51) மற்றும் அருபார்த்தபுரம் திரிவேணி நகரை சேர்ந்த சத்தியசீலன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News