செய்திகள்
விபத்து

குன்னம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2019-07-18 13:30 GMT   |   Update On 2019-07-18 13:30 GMT
குன்னம் அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே  உள்ள கூத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. தொழிலாளி. இவரது நண்பர்கள் சுப்பையா, முத்துசாமி. இவர்கள் 3 பேரும் கூத்தூர் சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்தனர்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த ரவிகுமார் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக பெரியசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். 

உடனே அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். 

இறந்துபோன பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடதக்கது. ரவிகுமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News