செய்திகள்
தற்கொலை (கோப்பு படம்)

சூலூர் அருகே இளம் பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-07-17 11:10 GMT   |   Update On 2019-07-17 11:10 GMT
சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்:

சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவில் பெண்கள் அழகு நிலையம் உள்ளது.

இந்த அழகு நிலையத்தில் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகள் ஷோபனா(25) கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

திடீரென அவர் அழகு நிலைய மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஷோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைகக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அழகு நிலையத்தில் ஷோபனா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஷோபனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News