search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager suicide"

    திலாஸ்பேட்டையில் காதலை தாய் கண்டித்ததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர் புதுவை சட்டசபையில் தினக் கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகள் ராஜவேணி (வயது 21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக பயிற்சிக்கும் சென்று வந்தார்.

    இதற்கிடையே ராஜவேணி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் லட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராஜவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார். இதில் மயங்கி விழுந்த ராஜவேணியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜவேணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேட்டவலம் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காதலி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வீராசாமி (வயது 32), திருவண்ணாமலையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கோணலூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் வாசுகி (27), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தினமும் ஒரே பஸ்சில் வேலைக்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். வாசுகி, வீராசாமிக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்கிக்கொண்டு வேட்டவலம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் அணுக்குமலைக்கு சென்றனர். அணுக்குமலை செல்லும் வழியில் ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாசுகி கொடுத்த புத்தாடையை வீராசாமி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வீராசாமி என் அண்ணனின் திருமணம் நடந்த பிறகுதான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாசுகி மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, வீராசாமி மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

    இதுகுறித்து வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை வலைவீசி தேடி வருகிறார். #tamilnews
    தேனி அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் வினோரதி (வயது19). இவரும் அதே பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகனும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அலெக்சாண்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோரதி புகார் அளித்தார். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூறினர்.

    வீட்டிற்கு வந்த பிறகு ரூ.5லட்சம் பணம் கொடுத்தால்தான் திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று அலெக்சாண்டர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோரதி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு அங்கு சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×