செய்திகள்
மரணம்

திருமணமான 15 நாளில் பரிதாபம்- லாரியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி

Published On 2019-07-16 10:20 GMT   |   Update On 2019-07-16 10:20 GMT
நெகமம் அருகே லாரியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெகமம்:

திருப்பூர் போஸ்ட்டல் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மாயவன் (வயது 26). இவர் கியாஸ் லாரி டிரைவர். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் நந்தினி(வயது 19) என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையில் செயல்பட்டு வரும் கியாஸ் நிரப்பும் நிறுவனத்துக்கு வந்தார். அப்போது வரும் வழியில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக மாயவன் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் லாரியின் மரக்கட்டையில் மோதியதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 15 நாட்களில் மாயவன் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
Tags:    

Similar News